சென்னை: நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைப் போன்ற தண்டனைகளே வழங்குவோம் என்று தெலங்கானா என்கவுன்டருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
நிலவுக்கு பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவரிடம் தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற நான்கு குற்றவாளிகளை காவல்துறை என்கவுண்டர் செய்தது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: